இன்று கொட்டித் தீர்க்கும் இந்த மேகம்,
இன்னொரு நாள் மௌனமாகக் கடந்து போகலாம்...
இக்கணமே வந்து என் கரம் கோர்த்துக்கொள்...
பக்கத்தில் நின்றபடி பகடி பேசலாம்...
ஒரு குடை பிடித்து அணைத்தபடி போகலாம்...
அதையும் வீசி விட்டு நனைந்தபடி வரலாம்...
தெருவோரக் கடையில் தேநீரோடு கொஞ்சம் மழையும் அருந்தலாம்...
ஒருவேளை மேகம் ஓய்ந்தால், மரங்களைத் தூறச் செய்யலாம்...
வா...இக்கணமே வந்து என் கரம் கோர்த்துக்கொள்...!!